Saturday, March 23, 2013

ஒலிக் குறிப்புகள்


மெட்டி ஒலி என் நெஞ்சை காதொடு தாலாட்ட ..


மூன்று பெண்கள் பேசிக் கொண்டே நடக்க துவங்குகிறார்கள். மெல்லியதாய் humming  ஆரம்பிக்கிறது. இந்த humming விஷயங்கள் தற்கால படங்களில் அரிதாகவே காணப்படுகின்றன. (உ.ம் - திருமலை - அழகூரில் )

மிக சாதரண நடுத்தர வர்க்கத்தின் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைவீசி நடத்தல், குடத்தில் முகம் பார்த்தல், விரும்பி சுவைக்கும் கடலையில் வீணானதை துப்புதல்.

சொல்ல முடியா சுகம் கொண்டிருக்கும் இறந்த காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

மறந்து போன பழைய தலைமுறையின் சந்தோஷங்களை மீட்டுக் கொண்டுவருகிறது.

காலம் எல்லா காயங்களையும் ஆற்றி விடும் ஆற்றல் உடையது. இசை அதனினும் ஆற்றல் உடையதாய் இருக்கிறது.

Saturday, March 9, 2013

விளம்பரம்


மிகப் பெரிய குளிர் பான நிறுவனத்தின் விளம்பரம்.

வயலின் கற்றுக் கொண்டிருக்கிறான் ஒருவன். இருவர் வருகிறார்கள். நன்றாக வாசிக்கிறார்கள். ஆசிரியை வருகிறார். இருவரையும் நன்றாக வாசிப்பதாக கூறி இருவரையும் அனுப்பி விடுகிறார். வயலின் கற்றுக் கொண்டிருப்பனை தன்னுடன் இருக்குமாறு கூறுகிறார்.

அவன் சந்தோஷமாக தலையட்டுகிறான்.
அருவெறுப்பின் உச்ச கட்டம்.

இதற்கு யாரும் மாற்று கருத்து தெரிவித்தார்களா என்று தெரியவில்லை.




மாத்ரு தேவோ பவ;
பித்ரு தேவோ பவ;
ஆச்சார்ய தேவோ பவ;

காலம் நம்மைக் காக்கட்டும்.

Tuesday, March 5, 2013

சொர்க்கம்


சமீபத்தில் திருமண விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். வாசலில் நுழையும் போது இசைக் கச்சேரி. வேண்டாம் மச்சான் வேண்டாம்  இந்த .. என்ற பாடல். மிகப் பெரும்பாலான மனிதர்கள் ரசித்தார்கள். (வேறு என்ன சொல்ல)


திருமண தம்பதியருக்கு அன்பளிப்பு அளிக்க காத்திருக்கும் ஒரு கூட்டம்.  ஒரு புறம் ஏறி, மற்றொரு புறம் இறங்க வேண்டும். தீடிரென இரண்டு பேர் எதிர் முனையில் ஏறி, அன்பளிப்பு கொடுத்து விட்டு இறங்கி விட்டனர்.சினிமா அரங்கமா என சந்தேகம் வந்து விட்டது.

உணவு அரங்கத்தில் மீண்டும் கூட்டம். பந்தி ஆரம்பித்து சாம்பார் தான் சாப்பிடுகிறார்கள். அதற்கும் சரவண பவனில் சீட்டு வைத்து காத்திருப்பது போல். சாப்பிட்டுக் கொண்டிருப்பவரின் பின்னால் காத்திருக்கும் கூட்டம்.

இந்த அக்கினி நம்மை காக்கட்டும் என்று தொடரும் மந்திரங்கள் எங்கே போயின.

திருமணங்கள் சந்தோஷ தருணங்கள். ஆனால் எது சந்தோஷ தருணங்கள் என்பதில் சந்தேகம்.