Friday, February 19, 2016

2038 - Neuron Repair



·   Scientists Connect Neurons in the Lab for the First Time

·   Injuries to the central nervous system — the brain and spinal cord — are particularly devastating because the body doesn’t regenerate neurons to repair connections between vital circuits and restore function. In other words, the damage is permanent or even fatal.

·   A team artificially connected two neurons using an atomic force microscope and tiny, polystyrene spheres.


·   Peter Grutter, likened the process to pulling a piece of chewing gum apart. In this case the gum, or axon, was roughly 1/100 the width of a human hair.


              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)


1.
ஏம்பா, ஏதாவது கட வக்கிலாம்னு இருக்கேன். Neuron Repair கட வக்கலாமா?
அட ஏம்பா அந்த பஞ்சர்  ஒட்ர  கட வேண்டாம்பா?

2
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் நியூரான் வழியாக செலுத்த உதவும் மின்சாரம் இலவசமாக 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

3.
மருத்துவமனையில்
சார், அந்த நியூரான் மாற்று...
500 கோடி குடுங்க சார்
யோவ், அது என்னான்னு கேக்க வந்தேன்.
நாங்க தலவலின்னு வந்தாலே 10 கோடி வாங்குவோம். நீ வேற இதப்பத்தி கேக்றீயா. அதான். (Information is wealth)

4.
நோயாளி
சார், கொஞ்சம் மெதுவா சார், நீங்க செய்ற operation ல Axon சரியா connect ஆகல.  Dendrites affect ஆகி nucleus damage ஆகிடுச்சி
மருத்துவர்
என்னயா சொல்ற? உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?
நோயாளி
நீங்க இப்ப படிச்சிட்டு வந்து இருக்கீங்க. நானெல்லாம் அந்த காலத்திலேயே Artificial Intelligence ம் Neural networks ம் அரியர் வச்சி பாஸ் பண்ணியிருக்கேன்.


5.
என்னா சார், தீடிர்னு இந்த மாசம் 1,00,000 கரண்ட் பில் ஏறி இருக்கு.
அது நீங்க Neuron Repair செய்தீங்க இல்ல. அதுக்கு recharge amt..
அப்ப போனமாசம் எங்க தாத்தாவுக்கு 50000 தான் வாங்கினீங்க?
வயசானவங்களுக்கு சார்ஜ் கம்மியாத்தான் ஆவும். அதான்.

Reference 
http://blogs.discovermagazine.com/d-brief/2016/02/09/scientists-connect-neurons-in-the-lab-for-the-first-time/#.VsbrjrR97IU

Friday, February 5, 2016

படைப்புகள் - அகம் புறம் - ஒரு சிறு பார்வை


(எவரையும் முன்வைத்து எழுதப்படவில்லை)

அகம்

·   நாம எல்லாம் எழுதினா போட மாட்டாங்க சார். அவங்களுக்குன்னு ஒரு குருப் வச்சிருக்கிறாங்க, அவன்க எழுதினாத்தான் போடுவாங்க.
·   நானும் 15 வருஷமா எழுதிகிட்டுத்தான் இருக்கேன் சார். ஒரு பயலும் மதிக்கிறதே இல்லை சார்.
·   சார், இவன்க எல்லாம் உள்ளுர் எழுத்தாளர்களை கொண்டா மாட்டாங்க, ரஷ்யா எழுத்துக்களை மட்டும் கொண்டாடுவாங்க.
·   முழு நேர படைப்பாளிகள்ன்னு யாரும் இல்ல சார். பொழுது போக்குக்காக படைக்கிறாங்க சார். அப்புறம் என்ன படைக்க முடியும்?
·   ஒரு வார பத்திரிக்கைக்கு ஒரு கவிதை எழுதி அனுப்சேன். நல்லா இருக்கு, நல்லா இல்ல அப்படீன்னு கூட பதில் அனுப்ப மாட்டேங்கறாங்க சார்.
·   எல்லாரும் ஈகோ புடிச்சவங்களா இருக்காங்க சார். அவன் தான், அவன் குருப்புதான் ஒஸ்தின்னு நினைக்கிறாங்க.

புறம்

·   படைப்பாளிகள் யாருமே படிக்கிறதே இல்ல சார். நினைச்சத எல்லாம் எழுதினா எப்படி சார் பத்திரிக்கையில போட முடியும்.
·   தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனோ இல்லையோ, பேனா புடிச்சவன் எல்லாம் கவித, கட்டுரைன்னு எழுத ஆரம்பிச்சா என்ன செய்ய முடியும்எல்லாருக்கும் சுஜாதான்னு நெனப்பு சார்.
·   இலக்கிய பத்திரிக்கைன்னு போட்டேன் சார். 1000 கவிதை வந்திருக்கிறது. என்னா செய்யறது சொல்லுங்க.
·   கதை, கவிதை கட்டுரைன்னு எழுதறாங்க சார், வல்லினிம் ஒற்று, மெய் எழுத்து மிகும் இடம், மிகா இடம் எதுவுமே தெரியல, அப்புறம் எப்டி நாங்க படிச்சி பப்ளிஷ் பண்ண முடியும்.
·   இருக்கும் ரோஜா தோப்பில் அழகான் ஒரு செடி நீ மட்டுமே - இப்படி கவிதை எழுதினா என்ன சார் செய்யறது? (காதுகளில் மெதுவாக - அழகான் - அழகானன்னு கூட தெரியல. அதுல கூட தப்பு பார்த்தீங்களா )
·   ஒரு புஸ்தகம் போடறது எவ்வளவு கஷ்டம்ன்னு இவன்களுக்கு தெரிய மாட்டேங்குது. அதான் சார் ப்ராபளமே
·   லாசரா வோட ஜனனி படிச்சிருக்கிறியா, குபாரா வோட விடியுமா படிச்சிருக்கிறியா, 4 படைப்பாளிகள் பேரை சொல்லி கேட்டா இவங்கள் எல்லாம் யாரு அப்படீங்கறாங்க. என்ன செய்ய சொல்றீக.
·   புஸ்தகம் போட்டா Review பண்றேன்னு ஒரு குருப் எல்லாதையும் வாங்கிட்டு போயிடுது. இதுல என்னா மிஞ்சும்ன்னு நினைக்கிறீங்க?


TRB Rating கம்மியாக இருப்பதால் இந்நிகழ்ச்சி இத்துடன் முடிவடைகிறது.

புகைப்படம் : R.s.s.K Clicks