Friday, March 21, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 8

நம் குழந்தைகள் நம் முன்னே வளர்தல் தான் உலகின் மிகப் பெரிய அதிசயம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறுத்தலில் மகிழ்வுறுபவன் மயானம் அடையான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மிகக் குறைந்த தூரம் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் மிக வயதானவனில் அருகில் அமரும் இளம்   பெண்கள், யாரும் அறியாமல் ஒரு இதழ் வழி புன்னகையை வயதானவனிடம் ஏற்படுத்துகிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விளக்கில் இருந்து எடுத்த பின்னும் நூல் திரியில் இருக்கும் எண்ணை தீரும் வரை அது எரியும்.  அதுபோல்  ஆன்மாக்கள் பக்குவம் பெறாமல் ஆசைகள் இருக்கும் வரை பழைய வாசனையின் காரணமாக பிறப்பு தொடர்ந்து கொண்டிருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிறு மழையில்தாயின் குடையில் வராமல் தலையை குடைக்குள் வைத்து கைகளை மழையில்   நனைந்து செல்லும் சிறார்களில் சந்தோஷங்கள் வலிமையானவை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி :  இன்னைக்கு லீவுஇன்னைக்கு முக்கியமா.... என்னங்க பேசாம இருக்கீங்க.
கணவன் : கையால் சைகை காட்டி - மௌனம் (எப்புடி)
மனைவி :  எல்லா நாளும் அப்படித் தான் பேசாம இருக்கீங்கஇது என்ன புதுசா (எப்புடி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------வாசிப்புக்கு உரிய கைகள் யாசித்தலே வாழ்வின் மகத்தான வலிகளில் ஒன்று.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------புகைவண்டியில் பயணிக்கும் போது பொருள் வேண்டி பாடும் கண்கள் அற்றவனின் 'முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்என்ற பாடல் அதிக வலி உண்டாக்குகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனது முதல் நரையை காணும் ஆணின் மனவலிகள் அதிகமானவை. பெண்ணின் மனவலிகள் அதை விட அதிகமானவை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------மனைவியின் 'பயண்பாட்டிற்கு' ஏற்றவாறு கணவன் நேசிக்கப்படுகிறான்.


Thursday, March 20, 2014

2038 – Galaxy and Universe














1.
Sir, Black hole concepts are very old and brown hole concepts was died 2014. Let us discuss about VIBGYOR holes.

2.
Galaxy Broker -  Do not worry sir. This is Dead galaxy. We are providing this galaxy at very less price Rs. 10/-

3.
Galaxy Broker - ‘Namba payalgal’ identified new galaxy with 300 sextillion stars. (3 followed by 23 zeros). If you want we can show this and you could visit any time.

4.
Husband - Though I am a scientist, I could understand Dark matter. But I am unable to find Rs.5/- from kitchen

5.
Galaxy Broker - He is ‘Namba payal’. He only identified Dart flow with 700 galaxy cluster. You could choose any galaxy for rent.

Wednesday, March 19, 2014

நகர மறுக்கும் நினைவுகள் – 8 - நான் வரைந்து வைத்த சூரியன்

படம் : ஜெயங்கொண்டான்.
இசை : இசைஞானிக்கு அடுத்து நான் நேசிக்கும் வித்யாசாகர்
பாடல் : யுகபாரதி


ஒரு நாள் வெளிநாட்டில் இருந்து ஒரு நண்பன் தொலைபேசியில் அழைத்தான்.
நான் ஒரு 'ஹம்மிங்' சொல்றேன். அது என்னா படம் என்னா பாட்டுன்னு சொல்லு.
'தெரியலடா'
'இல்ல அந்த பாட்ட FM வானொலியில் கேட்டுக் கொண்டே car ஒட்டினேன். படம் பேர் தெரிஞ்சா சொல்லு.

தீடிரென ஒரு நாள் அந்தப் பாட்டைக் கேட்க நிகழ்ந்தது. அப்பாடல் வரிகளுக்காக பல முறை இப்பாடலைக் கேட்டிருக்கிறேன்.

தலைவி தலைவன் கன்னத்தில் முத்தமிடுகிறான். தலைவன் மற்றொரு கன்னத்தைக் காட்டுகிறான். தலைவி சிரித்து விட்டு நடக்க ஆரம்பிக்கிறான்.

இசை ஆரம்பமாகிறது.

தலைவன் தலைவியை பின்னால் இருந்து தழுவிக் கொள்கிறான்.

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

சிறந்த கவிதைக்கான அனைத்துக் கட்டுக் கோப்புகளுடன் பிற மொழி கலவாமல் அழகிய சந்தங்களுடன் ஒரு பாடல்.

தலைவன்
ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

தலைவி
கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

தலைவன்
பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
மனது புன்னகைப்பதால் பறக்க ஆரம்பிக்கிறது

தலைவி
நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக
தலைவியும் சளைத்தவல் அல்ல. பெயர் கூறுவதால் அந்த நாட்கள் இனிப்பாக ஆகின்றன.

தலைவன்
தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்
என்னில் என் கால்களில்
நிலை தடுமாறுதல் நிகழ்கிறது ஆனால் அது மகிழ்வாக.

தலைவன் தன் நிலை விளக்கம் தருகிறான். காதலைக் கற்றுக் கொண்டதை உணர்த்துகிறான்.
பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

தலைவியும் தன்னிலை விளக்கம் தருகிறாள். தான் முல்லைப் பூவாக தொடுக்க தயாராக இருப்பதை உணர்த்துகிறாள்.
நல்ல முல்லை இல்லை நானும் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

தலைவன் தன் தவிர்ப்பை தெரிவிக்கிறான்.
ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்

தலைவி பதில் உரைக்கிறாள்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல் கொஞ்சம்
கெஞ்சும் தஞ்சம் நெஞ்சம்


எல்லா நினைவுகளுக்கு பின்னும் இருக்கின்றன இறகின் சிறகசைப்புகள். அதனால் தான் இன்னும் காலம் கடந்து சூரியன் ஒளிர்கின்றது.