Saturday, March 8, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 5

எதிர்பாராமல் குழந்தைகளால் பெறப்படும் முத்தங்களால் சில கனவுகள் கலைகின்றன. பல கனவுகள் உருவாகின்றன.
------------------------------------------------------------------------------------------
கொடுக்கும் கைகளை விட அதிக வலிமை வாய்ந்தவை இரக்கும் கைகள் அதைவிட வலிமை வாய்ந்தது வயிறு.
------------------------------------------------------------------------------------------
தன் கோபங்கள் உடைந்து மகிழ்வு பிறக்கும் நேரம் அலாதியானது.வாழ்வினில் என்ன இருக்கிறது தன் கோபம் உடைத்தல் தவிர.
------------------------------------------------------------------------------------------
பேருந்தில் பயணம் செய்பவர்களை விட புகைவண்டியில் பயணம் செய்பவர்களின் கண்களில் வெறுமை மிக அதிகமாக தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அட பிக்காளிப் பயலுகளா, மாட்டுப் பொங்கல்னா மாட்டுக்கு படைக்கிற பொங்கல்டா, மாட்டை வெட்டி பொங்கல் படைக்கறது இல்லடா
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கர்வம் கொள்வதில் பெண்கள் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதும் கர்வத்தை மறைக்க முடியவில்லை. தனது மகனிடம் முத்தம் பெறுவதில் தனி கர்வம் தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
த்யானம் - தனது மகளும் பேசிச் செல்லும் ஒவ்வொரு தகப்பனும் உணர்கிறான் இறைவனின் அருகாமையை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்லா நாளும்  SMS அனுப்புறவன் ஃப்ரெண்ட் இல்ல, வருஷ பொறப்புக்கும் ஃப்ரெண்ட்ஷிப்டேக்கும்  அனுப்புறவன் தான் ஃப்ரெண்ட்.

அப்பன் காசில்  SMS அனுப்புவோர் சங்கம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னைக்கு புது வருஷம் பொறந்திருக்கு. இன்னைக்கு எங்கயும் வெளியில போக வேண்டாம். இந்த வருஷத்தில் இருந்தாவது சொல்லாமலே எல்லா வேலையும் நீங்களே செய்ங்க.

Mr.X : எனக்கு மட்டும் தான் லீவே கிடையாது போல. அது சரி அடிமைகளுக்கு ஏது சுய சிந்தைகளும்/சிந்தனைகளும்.

நிகழ்ச்சி இத்துடன் நிறைவு பெறுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏங்க இன்னைக்கு லீவு தானே,கொஞ்சம் கடைக்கு போய் காய்கறி வாங்கிகிட்டு வாங்க,பசங்கள டிராயிங் கிளாஸ்ல விட்டுட்டு வாங்க,பாட்டு கிளாஸ்லயும் விட்டு அழைச்சிகிட்டு வாங்க, T.Vம் மிக்ஸியும் ரிப்பேரா இருக்கு அத சரி பண்ணனும், காஸ் அடுப்பு ஒரே அழுக்கா இருக்கு, அத கொஞ்சம் தொடச்சி தாங்க.
ஏங்க இந்த வெண்டைக்காய வாங்கிட்டு வந்தீங்க, நல்லாவே இல்ல, அப்புறம் இன்னைக்கு இன்னும் வேல இருக்கு, ப்ரெண்ட்ஸ் வராங்கன்னு ஊர் சுத்த போயீடாதீங்க, இப்ப என்னா செஞ்சி கிழிச்சிட்டீங்க, பாட்டு வேண்டி கிடக்கு



மனைவி : என்னான்னே தெரிலங்க, ஒரே தலவலியா இருக்கு.

No comments:

Post a Comment