Friday, October 25, 2013

2038 - இயந்திர மனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின் வலைப்பின்னல்


2038 - இயந்திர மனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின் வலைப்பின்னல்
(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
மிகச் சிறந்த வலைப்பின்னல் மற்றும் அறிவுள்ள உணர்தல் கூடிய நுட்பம் சார்ந்தது.( intelligent sensing systems)
சார், இத வச்சி எம் புருசனுக்கு எப்ப அறிவு வரும்னு சொல்ல முடியுமா?
2.
சார், இது மிகச் சிறந்த அறிவான வலைப்பின்னல் வகையைச் சார்ந்த கைப்பேசி தான். ஆனா உங்க பொண்டாட்டி எவ்வளவு நேரத்தில துணி எடுப்பாங்கன்னு சொல்ல முடியாது சார்.
3.
என்னங்க நீங்க, சிறந்த வலைப்பின்னல் கூடியது அதால உதட்டால பேசறத எல்லாம் புரிஞ்சிக் முடியும்னு சொல்லி குடுத்தீங்க. ஆனா எம் புருசன் பேசற கெட்ட வார்தைகளை மட்டும் புரிஞ்சிக்க முடியல சார்.
4
மிகச் சிறந்த தொழில் நுட்ப வலைப்பின்னலுடன் கூடிய தானியங்கி கார்களை சென்னைக்கு டெமோவிற்கு அனுப்பியது தப்பா போச்சு.
ஏன்?
ஒரு அடி கூட நகரல. எல்லாம் பெயில் ஆயிடுச்சு.
5
சார் எங்களை மன்னிச்சுடுங்க, உங்க மனைவி எப்ப எல்லாம் கோவப்படுவாங்கன்னு நரம்பு சார்ந்த வலைப்பின்னல்ல ஏத்திட்டோம் சார். ஆனா, அதுக்கு மேல நினைவாற்றலை அதிக படுத்த முடியல சார்.
6
என்னாப்பா? போன வாரம் வாங்குன ரோபோ சரியா வேலை செய்யல?

அது ரிசஷன் பீரியட்ல செய்தது சார். அதனால 50 மில்லியன் வலைப் பின்னல்கள் சரியா வேலை செய்யாது சார்.

Monday, October 7, 2013

ஒரு பாதி கனவு நீயடி..

எவ்வித இசையும் இன்றி நெஞ்சினில் கத்தி வைப்பது போல் ஆரம்பமாகிறது பாடல். நீ என்பதே நான் தானடி..,

ஒரு வாகனம் நகர ஆரம்பமாவதில் கவிதைகள் (மன்னிக்கவும்) பாடல் ஆரம்பமாகிறது.

ஊடல் பற்றிய நிகழ்வுகள் பல திரைப்படங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ஆனாலும் இது தனியாக தெரிகிறது.

ஊடல் கொண்ட வேளை. கணவன் தன் நினைவு இன்றி தலைவாருகிறான். மனைவி சீப்பினை எடுத்ததால் அவளுக்கு  மிகக் கோபம். கோபத்தில் கண்களை மூடிக் கொள்கிறான்.

மனைவியை சந்திக்க நோயாளியாக நுழைகிறான். மெல்லிய புன்னகை இருவருக்கும்.

சிறு பயணத்தில் சில தீண்டல்கள்,

வாழ்த்து அட்டைகள், தன்னை தருவதாக முடிகிறது.

மனைவி கணனி கற்றுத்தருகிறாள். தன்னை அறியாமல் தீண்டிவிடுகிறாள். கள்ளப்புன்னகை கணவனுக்கு.(விக்ரமால் மட்டுமே முடியும்).

கணவன் மனைவியின் ஊடல் மிகச் சரியாக, மிகச் சிறந்த கவிதையாக வடிவம் பெற்றிருக்கிறது.

காலம் பெயரிட்டு அழைக்கும் கவிதையில் இது நிச்சயம் இடம் பெறும். வீட்டில் இருந்து மழையை ரசிப்பது போல், யாருமற்ற இரவுகளில் மனதை அதன் வழிகளில் இட்டுச் செல்லும் பாடல்களில் இது நிச்சயம் இடம் பெறும்.

Thursday, October 3, 2013

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

முதல் முறையாக 100 வயலின்கள் இசைக்கு பயன்படுத்தப்பட்டது தளபதி படத்தில். அப்போது ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அனைவரும் வாசித்து கொண்டிருந்தனர்.

அப்போது இசை ஞானி சொன்னார் 'ஏம்பா, அந்த 38வது வயலின் சரியா வாசிக்கல. அவரை சரியா வாசிக்கச் சொல்லுங்க'