Tuesday, April 30, 2013

அட்சய திருதியை



மீண்டும் ஓரு வியாபாரத்திற்கு தயாராகி விட்டோம்.

அனைவரும் வியாபார உத்திகளை மாற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நள்ளிரவு 12 மணி முதல் வியாபாரம்.

அனைத்து நிகழ்வுகளும் கலியில் மாற்றப்படும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

வைகாசி மாதம் அம்மாவாசைக்கு பிறகான மூன்றாவது நாள் - திருதியை.
அன்று தொடங்கப்படும் காரியங்கள் விருத்தி அடையும். (உ.ம் தானம், தருமம்,பசுவிற்கு உணவிடுதல்)

(தானம் - தனக்கு சமமானவர்களுக்கு கொடுப்பது,தருமம் - தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு கொடுப்பது. )

வாசலில் வரிசையில் நிற்பது, கடன் வாங்கி நகை வாங்குவது அனைத்தையும் விட்டொழியுங்கள்.

வாருங்கள், வாழ்க்கை வாழ்தலில் இல்லை. உண்மையை உணர்தலில் இருக்கிறது.



Saturday, April 6, 2013

எங்கே எதிர்காலம்?


நண்பன் ஒருவனை சந்திக்கச் சென்றிருந்தேன். வீட்டில் தொலைக்காட்சி அலறிக் கொண்டிருந்தது.

தொகுப்பாளர் ஊர் ஊராக சென்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

தொகுப்பாளர் : இராவணன் தவறு செய்வதாக சொல்லி அவனிடம் இருந்து விலகி வந்த தம்பியின் பெயர் என்ன?
பதில் : ...
தொகுப்பாளர் : விஜய் சினிமா துறைக்கு வந்து இருபது வருடம் ஆகிறது. அவர் நடித்த முதல் படம் எது?
பதில் : நாளைய தீர்ப்பு.
தொகுப்பாளர் :  மிக அருமையான பதில்
பார்வையாளர்கள் மத்தியில் மிக்க சந்தோஷம்.

கண்ணிர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை கண்ணீரால் காத்தோம்