Thursday, May 30, 2013

2038

2038

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
(நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது.)


பல் வேறு தலைப்புகளில் எழுத உள்ளேன். சில தலைப்புகள்.




இலக்கியம்
சினிமா
சமூகம்
வாழ்க்கை
அறிவியல்
பொருளாதாரம்

இலக்கியம்
------------------
இந்த வருடத்திற்கான இலக்கிய பாடல்.

எனக்கு கண்வலி ஏன் தெரியுமா?
கண்ணே
உன் ரோஜா பார்வை பட்டதால்.

மேற்கண்ட கவிதை ரூ.1,00,000/-. பரிசு பெறுகிறது.

சினிமா
-----------
தலைவர் ரஜினியின் மற்றும் ஒரு மகுடம். கல்லூரிக் காலங்கள்.  பழம் பெரும் நடிகை லக்ஷ்மி மேனனின் மகள் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

சமூகம்
-----------
பூட்டிய வீட்டினில் 1 லி. தண்ணீர் திருட்டு.

வாழ்க்கை
---------------
அரிஷ்டநேமி, நீ ஏன் எப்ப பாத்தாலும் பசி பட்னின்னு கவித எழுதுற.
இதுக்கு 5623  like

இது சும்மா சாம்பிள் தாம்மா. மெயின் பிச்சர் பாரு.

Sunday, May 19, 2013

கெட்டிச்சட்னி



பொ. கடலை,
உப்பு,
கா. மிளகாய்,
தேங்காய் துருவல்.
கடுகு/வெ.உ.பருப்பு - தாளித்தது

பொ. கடலையை மிக்சியில் நன்கு அறைத்துக் கொள்ளவும்.
பிறகு  உப்பு,கா. மிளகாய்,தேங்காய் துருவல் இவைகளை சிறிது நீர் விட்டு அறைக்கவும்.

பொ. கடலை இரண்டு பங்கும்,தேங்காய் துருவல் ஒரு பங்கும் இருத்தல் நலம்.

கடுகு/வெ.உ.பருப்பு - தாளித்தை அதனுடன் சேர்க்கவும்.

கெட்டிச்சட்னி ரெடி.

நான் ரசித்த இடம் - ராயர் மெஸ் - மயிலை.
படத்தில் இருப்பது நான் செய்தது.

நாங்களும் செய்வோமில்ல .

Friday, May 3, 2013

சருகின் சலனம்


எனது பள்ளி விடுமுறை நாளுக்கு தாத்தா-பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம்.

'டேய்' - அம்மா

'ம்'- நான்

'சினிமாவுக்கு போலாமா'-அம்மா

'ம்'- நான்

'போய் தாத்தாகிட்ட கேளு' -அம்மா

'தாத்தா,சினிமாவுக்கு போவட்டுமா' - நான்

'பத்திரமா போய்ட்டு வாங்க' - தாத்தா.

மணி 6 நெருங்கிக் கொண்டிருந்தது.

'சீக்கிரம் கிளம்புமா'

'இருடா, மாவு அறைச்சிட்டு வந்திடுறேன்'

'சீக்கிரம் சீக்கிரம் '

ஊருக்கு வெளியே 2 கி.மி-ல் தியேட்டர். தொலை தூரத்தில் பாடல்.
'மருத மலை மாமணியே'--

'டேய், சீக்கிரம் வாடா, மருத மலை பாட்டு போட்டுட்டான், டிக்கட் கொடுக்க ஆரம்பிச்சிட்டான்'.

கூட்டம் வேகமாக செல்ல ஆரம்பிக்கும்.
இறை உணர்வோடு தொழில் தொடக்கம். அதே சமயம் மற்றவர்களுக்கு ஓரு  Communication method.

நினைவுகளோடு மூழ்கி TV பார்க்க ஆரம்பித்தேன்.
'மருத மலை மாமணியே  - பாடல்'

'பழைய பாட்டை நிறுத்தி தொலைங்க, சகிக்கல' - மகன்.

காலம் மாற்றத்தில் உதிராத சருகுகள் எவை.