Thursday, September 19, 2013

தொடரும் நினைவுகளும் பாடலும்

ஆகாய கங்கை - இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதன் தாக்கம் இன்று வரை தீர வில்லை.

படம் : தர்ம யுத்தம்(தலைவர் படம்).இசை: இசை ஞானி. எனக்கு மிகவும் விருப்பமான மலேஷியா வாசுதேவன்.(கணவனை  மிகவும் விரும்பும் மனைவியின் ஆரத்தழுவுதல் -அந்த குரலுக்கு இன்னும் உருவகம் தேடிக் கொண்டிருக்கிறேன்).

மெல்லியதாய் ஆரம்பிக்கிறது பாடல்.

ஆண் :  துணையை விரும்புவதாக சொல்கிறான்.
பெண் :  தேடிய ராமனை கண்டதாக உரைக்கிறாள்.

ஆண்        :  ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
                    மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

பெண்       :  குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
                    தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

நான் என்றும் தனித்து இல்லை. என் வாழ்வு உன் துணையோடுதான் என்கிறாள் துணை.

மிக அழகாக தன் காதலைச் சொல்கிறாள்.

பெண் :
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஆண் நாசுக்காக மறுத்து பதில் சொல்கிறான்.
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு

பல பாடல்கள் நினைவில் நீங்காமல் இருந்தாலும், இது முக்கிய இடத்தில்.
காலம் கடந்து  இருப்பவை பொருள்கள் மட்டும் அல்ல. பாடல்களும் அதன் தாக்கங்களும்.

No comments:

Post a Comment